புதிய hantavirus பரவலுக்கான ஆபத்து கனடாவில் குறைந்த அளவில் உள்ளதாக கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மாதம் MV Hondius என்ற உல்லாசக் கப்பலில் hantavirus தொற்று பரவியது.
10 கனடியர்கள் இந்த தொற்றுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் சந்தேகிக்கிறது.
இவர்களில் ஆறு பேர் கனடாவிலும், சொகுசுக் கப்பலில் நான்கு பெரும் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் rodents எனப்படும் கொறித்துண்ணிகளிடமிருந்து விலகி இருங்கள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Joss Reimer எச்சரித்துள்ளார்.
Hantavirus கொறித்துண்ணிகளை தாக்கும் ஒரு வகை தொற்று எனவும், அவை சில சமயங்களில் மனிதர்களுக்கும் பரவக்கூடும் எனவும் Dr. Joss Reimer கூறினார்.
அந்தக் கப்பல் பயணத்துடன் தொடர்புடைய மூன்று பேர் Ontario, Quebec மாகாணங்களில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், Alberta-வில் இருவர், Ontario-வில் ஒருவர் என கூடுதலாக மூன்று கனடியர்கள் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளால் பொது சுகாதார விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
“இந்த தொற்றின் அறிகுறியற்ற நபர்கள் ஏனையவர்களுக்கு இந்த தொற்றை பரப்ப முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என Dr. Joss Reimer கூறினார்.
இந்த நிலையில் Hantavirus தொற்றால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் உள்ள நான்கு கனடியர்களை சந்திப்பதற்காக, கனடிய தூதரக அதிகாரிகள் Canary தீவுகளுக்கு பயணித்துள்ளனர்.
மூன்று மரணங்கள் உட்பட எட்டு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
