போதைப்பொருள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்திய குற்றத்திற்காக தமிழரான Toronto சிறைக் காவலர் சிறைத் தண்டனையை எதிர்கொள்கிறார்.
யது சத்தியகாந்தன் என்ற Toronto சிறைக் காவலர் தனது குற்றங்களுக்காக 26 மாதங்கள் சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்.
ஆயிரக்கணக்கான டொலர் மதிப்புள்ள போதை பொருட்களையும் ஆயுதங்களையும் Toronto தெற்கு தடுப்பு மையத்திற்குள் (Toronto South Detention Centre – TSDC) கடத்திய குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பொட்டலங்கள், கைபேசிகள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைக்குள் கடத்தியதாக யது சத்தியகாந்தன் ஒப்புக்கொண்டார்.
அவர் நீதிமன்றத்தில் தனது நடத்தையை “தார்மீக ரீதியாக தவறானது” எனவும் “உணர்ச்சிவசப்பட்ட, முட்டாள்தனமான” முடிவு எனவும் கூறி வருத்தம் தெரிவித்ததாக இந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
