புதிய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கனடா, இந்திய பிரதமர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தச் செய்தியை அறிவித்தார்,
இந்த புதிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 70 பில்லியன் டொலர்களாக இரட்டிப்பாக கூடும் என கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் நடந்த G20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இருநாட்டின் தலைவர்களும் சந்தித்தனர்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ள நிலையில், கனடிய தொழிலாளர்கள், வணிகங்களுக்கு இது புதிய வாய்ப்புகளை வழங்கும் எனவும் Mark Carney நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா கனடாவின் ஏழாவது பெரிய வர்த்தக பங்காளியாகும்.
2024-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் மொத்தம் $30.9 பில்லியனாக இருந்தது.
கனடாவின் குடியேற்ற வாசிகளுக்கான மிகப்பெரிய மூல நாடாகவும் இந்தியா உள்ளது.
2026-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கான அழைப்பை Mark Carney ஏற்றுக் கொண்டுள்ளார் என கனடிய பிரதமர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
இந்தியாவை நம்பகமான வர்த்தக கூட்டாளியாக கனடா கருதுகிறது என பிரதமர் Mark Carney வார விடுமுறையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
