செல்வாக்கு மிக்க உலக நாடுகளின் தலைவர்களை கனடிய பிரதமர் சந்தித்தார்.
G20 மாநாட்டுக்காக உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளின் தலைவர்கள் தென்னாப்பிரிக்காவில் கூடியுள்ளனர்.
இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் Narendra Modi, Australian பிரதமர் Anthony Albanese, இங்கிலாந்தின் பிரதமர் Keir Starmer, துருக்கி, France, Germany, Jamaica, Norway ஆகிய நாடுகளின் தலைவர்களையும் கனடிய பிரதமர் Mark Carney சந்தித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம், உலக வர்த்தக அமைப்பு தலைவர்களையும் சந்தித்த Mark Carney அங்கு நடைபெற்ற Vietnam, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒரு நிகழ்விலும் பங்கேற்றார்.
Johannesburg நகரில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக Mark Carney, வெள்ளிக்கிழமை (21) தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.
பிரதமராக தென்னாப்பிரிக்காவிற்கான தனது முதல் பயணத்தில் Mark Carney அங்கு சுமார் 48 மணி நேரம் செலவிடுகிறார்.
காலநிலை மாற்றம், பாலின சமத்துவம், உக்ரைன் உள்ளிட்ட விடயங்கள் இம்முறை G20 உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.
உக்ரைனின் பிராந்திய இறையாண்மை முக்கியமானது என்ற கனடாவின் நீண்டகால நம்பிக்கையை அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வலியுறுத்தினார்.
உள்நாட்டில் எமது பொருளாதார வலிமையின் அடிப்படையில் மட்டுமல்லாமல், எமது முக்கிய மதிப்புகளின் அடிப்படையில் நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய இந்த மாநாட்டில் கனடா ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தும் என அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
பன்முகத்தன்மைக்கு இது ஒரு சிறந்த நாள் என கூறிய அனிதா ஆனந்த், கனடாவின் வெளியுறவுக் கொள்கையில், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை உறுதி செய்வதற்காக உக்ரைன் முன்னுரிமை பெறுகிறது எனவும் மேலும் கூறினார்.
தென்னாப்பிரிக்கா வெள்ளையர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி, அமெரிக்க ஜனாதிபதி அதிபர் Donald Trump இந்த உச்சி மாநாட்டை புறக்கணிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது
