Richmond Hill குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வாகனம் மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது, மற்றொரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
புதன்கிழமை (10) பிற்பகல் Richmond Hill குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒரு வாகனம் மோதியதில் 10 குழந்தைகள் காயமடைந்ததாக முதலில் York பிராந்திய காவல்துறை தெரிவித்தது.
ஆனால் காயமடைந்தவர்களில் மூன்று குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்த ஒரு குழந்தை பெற்றோருடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டாவது குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை வயது சிறுவன் இறந்துவிட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் உள்ளதாகவும், மீதமுள்ள குழந்தைகள், ஊழியர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரியவருகிறது.
சம்பவ இடத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவருக்கு எதிராக இதுவரை எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
இந்த சம்பவத்தை “கற்பனை செய்ய முடியாத சோகம்” Richmond Hill நகர முதல்வர் David West தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்த காவல்துறையினரின் விசாரணைகள் தொடர்கின்றன.

