கனடாவின் அடுத்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு May 2026-இல் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான திகதியையும், அதில் முன்வைக்கப்படும் கேள்விகளையும் நிர்ணயித்து மத்திய அமைச்சரவை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இறுதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-இல் நடைபெற்றது.
தொற்று நோய் காலத்தில் நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும்.
இது வயது, பாலினம், திருமண நிலை, குடும்ப அமைப்பு, வசிப்பு முறை உள்ளிட்ட மக்கள் தொகை உள்ளிட்ட தரவுகளை சேகரித்தது.
வேலைவாய்ப்பு, பாடசாலைகள், பொதுப் போக்குவரத்து, மருத்துவமனை சேவைகள் உள்ளிட்ட அரசு சேவைகளை திட்டமிட இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.
