தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்து CSIS எச்சரிக்கை!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23)  வெளியிட்டார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகியவை தலையிட முயற்சிக்கக்கூடும் என மூத்த CSIS புலனாய்வு அதிகாரி எச்சரித்தார்.

பொதுத் தேர்தலின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவயின் துணை இயக்குநர் Vanessa Lloyd இந்த தகவலை சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் அடுத்த தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டின் அறிகுறிகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக The Critical Election Incident Public Protocol (CEIPP) குழு கூறுகிறது.

Related posts

இரண்டு மாதங்களில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளது!

Lankathas Pathmanathan

பிரதமர் Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்!

Gaya Raja

தமிழ் சமூக மையத்தின் முதற்பார்வை வெளியீடு!

Gaya Raja

Leave a Comment