தேசியம்
செய்திகள்

இலங்கை வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று  கறுப்பு ஜூலை: கனடிய பிரதமர்

இலங்கை வரலாற்றின் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று  கறுப்பு ஜூலை என கனடிய பிரதமர் Trudeau குறிப்பிட்டார்.

கறுப்பு ஜூலையின் 41ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“கறுப்பு ஜூலையில் துன்பத்தை அனுபவித்து, அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் கனேடியர்களுடன் இணைந்து எனது ஆழ்ந்த இரங்கலை இந்த நாளில் வெளியிடுகிறேன் என அந்த அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை வன்முறை தசாப்த காலங்கள் நீடீத்த ஆயுதப் போராகியது எனவும் அவர் கூறினார்.

கறுப்பு ஜூலையின் பின்னணியில் 1,800 தமிழர்கள் கனடாவுக்கு புலம்பெயர்ந்தனர் என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கனடிய பிரதமர் வெளியிட்ட கறுப்பு ஜூலை ஊடக அறிக்கை:

Statement by the Prime Minister to mark 41 years since Black July ENG  

Statement by the Prime Minister to mark 41 years since Black July TAMIL

Related posts

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

மன்னர் மூன்றாம் Charles முடிசூட்டு பதக்கத்தை பெற்ற கனடிய தமிழர்கள்

Lankathas Pathmanathan

வதிவிடப் பாடசாலைகளில் முதற்குடி மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகினர்: திருத்தந்தை

Lankathas Pathmanathan

Leave a Comment