தேசியம்
செய்திகள்

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகல்!

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகுகிறார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக Jonathan Pedneault அறிவித்தார்.

Ottawaவில் பசுமைக் கட்சி தலைவர் Elizabeth Mayயுடன் இணைந்து அவர் இந்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை (09) வெளியிட்டார்.

தனது முடிவு குறித்து மேலும் கருத்து எதுவும் தெரிவிக்கப் போவதில்லை என அவர் கூறினார்.

Elizabeth May, Jonathan Pedneault ஆகியோர் இணைந்து 2022இல் பசுமைக் கட்சியின் தலைமைப் பதவியை வெற்றி பெற்றனர்.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் முறையே தலைவராகவும், துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தனர்.

Elizabeth May பசுமைக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.

அவர் British Colombia மாகாணத்தின் Saanich-Gulf Islands தொகுதியை 2011 முதல் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

Jonathan Pedneault, 2023 இடைத் தேர்தலில் Quebec மாகாணத்தின் Notre-Dame-de-Grâce–Westmount தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Related posts

ரஷ்ய தூதரக நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது தவறு: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற கிழக்கு கட்டிடத்தில் தன்னைத் தானே தடுத்து வைத்திருந்த நபர் கைது

Lankathas Pathmanathan

Toronto இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment