தேசியம்
செய்திகள்

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.

வன்முறை அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் உள்ள கனடியர்களை உடனடியாக வெளியேறுமாறு வெளிவிவகார அமைச்சர் Melanie Joly வலியுறுத்தினார்.

அதிகரித்து வரும் வன்முறை காரணமாக பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைய கூடும் என Melanie Joly செவ்வாய்க்கிழமை (25) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்

லெபனானுக்கு பயணிப்பதற்கான நேரம் இதுவல்ல என Melanie Joly அந்தக் கடிதத்தில் கூறினார்

ஆயுத மோதல்கள் தீவிரமடைந்தால், அது கனடியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் திறனையும், தூதரக சேவைகளை வழங்கும் கனடாவின் திறனையும் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.

Related posts

தடுப்பூசி இழப்பீட்டு திட்டத்திற்கு மேலதிகமாக $36 மில்லியன்

Lankathas Pathmanathan

Osama bin Laden-னுடன் தொடர்பில் இருந்த கனடியர் கைது!

Lankathas Pathmanathan

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment