தேசியம்
செய்திகள்

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.

வன்முறை அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் உள்ள கனடியர்களை உடனடியாக வெளியேறுமாறு வெளிவிவகார அமைச்சர் Melanie Joly வலியுறுத்தினார்.

அதிகரித்து வரும் வன்முறை காரணமாக பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைய கூடும் என Melanie Joly செவ்வாய்க்கிழமை (25) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்

லெபனானுக்கு பயணிப்பதற்கான நேரம் இதுவல்ல என Melanie Joly அந்தக் கடிதத்தில் கூறினார்

ஆயுத மோதல்கள் தீவிரமடைந்தால், அது கனடியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் திறனையும், தூதரக சேவைகளை வழங்கும் கனடாவின் திறனையும் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.

Related posts

அதிகரித்து வரும் தொற்றின் ஏழு நாள் சராசரி

Lankathas Pathmanathan

Doug Ford அமெரிக்கா பயணம் – கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

Lankathas Pathmanathan

கனடாவில் தரித்து நிற்கும் ரஷ்ய சரக்கு விமானம் உக்ரைனால் பறிமுதல்

Lankathas Pathmanathan

Leave a Comment