தேசியம்
செய்திகள்

இறையாண்மை குறித்த வாக்கெடுப்பு பொறுப்பற்றது: Quebec முதல்வர்

இறையாண்மை மீதான வாக்கெடுப்பு பொறுப்பற்றது என Quebec மாகாண முதல்வர் தெரிவித்தார்.

பெரும்பாலான Quebec வாக்காளர்களை இறையாண்மைக்கு ஆதரவாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாக முதல்வர் François Legault கூறினார்.

இறையாண்மை மீதான மூன்றாவது வாக்கெடுப்பில் தோல்வி அடைய முடியாது எனவும் அவர் கூறினார்.

Quebec மாகாணத்தின் இன்றைய அவசர நிலை தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதாகும் என François Legault தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளில், Quebec மக்கள் தொகை 270,000 பேரால் அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில், Quebec மாகாணம்  மொத்தம் 560,000 நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கொண்டிருந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை 2026 தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திட்டத்தை François Legault உறுதிப்படுத்தினார்.

Related posts

கனடாவில் COVID மரணங்கள் 23 ஆயிரத்தை தாண்டியது!

Gaya Raja

21 ஆம் நூற்றாண்டின் மோசமான காட்டுத்தீ பருவத்தை கனடா எதிர்கொள்கிறது

Lankathas Pathmanathan

ஊடக அறமற்றது: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News செய்திக் கட்டுரையை கண்டிக்கும் கனடிய தமிழர் கூட்டு!

Lankathas Pathmanathan

Leave a Comment