தேசியம்
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு நிலையான அமைதி காணும் பயணத்தை ஆரம்பித்துள்ள கனடிய வெளியுறவு அமைச்சர்

கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு நிலையான அமைதி காணும் வகையில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

புதன்கிழமை (06) ஆரம்பமான இந்த பயணம் 13ஆம் திகதி வரை தொடர்வுள்ளது.

அமைச்சர் Mélanie Joly, சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், மேற்குக் கரை ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

March 6 முதல்  9 வரை அவர் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

பின்னர் அவர் March 10 முதல் 13 வரை இஸ்ரேல், ஜெருசலேம், மேற்குக் கரைக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தனது பயணத்தின் போது, அமைச்சர்  Mélanie Joly இந்த பிராந்தியங்களின் வெளியுறவு அமைச்சர், வெளிநாட்டு அதிகாரிகளை சந்திப்பார்.

தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்த கருத்துக்களை அவர் இந்த சந்திப்புகளில் பரிமாறிக் கொள்வார்.

கடந்த வருடம் October 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு கனடாவின் தெளிவான கண்டனத்தை அவர் மீண்டும் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

Related posts

வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ உதவி

Lankathas Pathmanathan

பாதுகாப்பான சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும்: பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment