September 10, 2026
தேசியம்
செய்திகள்

இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காணொளி குறித்து காவல்துறை விசாரணை

கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வெளியான காணொளி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

கனடாவில் உள்ள அனைத்து இராஜதந்திரிகளின் பாதுகாப்பையும் கனடிய அரசாங்கம் உறுதி செய்யும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனாலும் இந்த அச்சுறுத்தல் குறித்த விபரங்கள் எதனையும்அமைச்சு வெளியிடவில்லை.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை விபரங்களை RCMP மூலம் அறிந்து கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆனாலும் இந்த விடயத்தில் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த RCMP மறுத்துள்ளது.

Ottawa வில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த அச்சுறுத்தல் குறித்து கருத்துத் தெரிவிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.

Related posts

காணாமல் போன மூன்று வயது Mississauga சிறுவன் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Blue Jays அணி Dodgers அணியை ஆறு ஆட்டங்களில் தோற்கடிக்கும்: Mark Carney, Doug Ford நம்பிக்கை!

Lankathas Pathmanathan

பேச்சுவார்த்தை தொடர்கிறது: கனடா-அமெரிக்கா வர்த்தக அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment