தேசியம்
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார்: Justin Trudeau

கனடாவின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் David Johnston தொடர்ந்து பதவியில் இருப்பார் என பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (02) உறுதிப்படுத்தினார்.

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் David Johnston அவரது பதவியில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக இந்த வாரம் வாக்களித்தனர்.

NDP முன்வைத்த தீர்மானம் Conservative, Bloc Quebecois நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணை வெளிநாட்டு தலையீடு தொடர்பாக பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு அரசாங்கத்தை கோருகிறது.

இந்த நிலையில் David Johnstonனின் பதவி விலகலை Conservative தலைவர் Pierre Poilievre வெள்ளியன்று மீண்டும் வலியுறுத்தினார்

ஆனாலும் David Johnston மீதான தனது நம்பிக்கையை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழ்மை மீண்டும் உறுதிப்படுத்தினார்

எதிர்வரும் மாதங்களில் David Johnston நாடு முழுவதும் முன்னெடுக்கும் பொது விசாரணைகளை எதிர்பார்த்திருப்பதாக Justin Trudeau கூறினார்.

இந்த விசாரணைகளை தொடர்ந்து October இறுதிக்குள் David Johnston இறுதி அறிக்கையை வெளியிடவுள்ளார்.

Related posts

Niagara Falls பகுதியில் மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

Lankathas Pathmanathan

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் வாழ்த்து

Lankathas Pathmanathan

இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமரின் கருத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: இலங்கை அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment