தேசியம்
செய்திகள்

கனடியர்களை சூடானில் இருந்து வெளியேற்றும் விமானங்கள் நிறுத்தம்

சூடானில் இருந்து கனடியர்கள் வெளியேற்றும் விமானங்களை நிறுத்த கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சூடானின் பாதுகாப்பு நிலைமை காரணமாக அங்கிருந்து வெளியேறும் விமானங்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சூடானை விட்டு தனிப்பட்ட முறையில் வெளியேற விரும்பும் கனடியர்கள் Port Sudan, Red Sea வழியாக வெளியேற முயலலாம் எனவும் கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

சனிக்கிழமை (29) சூடானில் இருந்து மேலும் இரண்டு கனடிய விமானங்கள் கனடியர்களை வெளியேற்றியது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதிப்படுத்தினார்.

சுமார் 400 கனேடியர்கள் சூடானில் இருந்து விமானங்களில் வெளியேற்ற பட்டுள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

British Colombia வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகள் சிவில் நீதி அமைப்பிற்கு மாற்றம்!

Gaya Raja

குழந்தை மரணத்தில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment