November 15, 2025
தேசியம்
செய்திகள்

Quebec தீயில் சிக்கி 6 பேர் மரணம்

Quebec மாகாணத்தில் இல்லமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.

வியாழக்கிழமை (09) அதிகாலை 1 மணியளவில் Lanaudiere பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த தீ காரணமாக இல்லமொன்று முற்றிலும் அழிக்கப்பட்டது என Quebec காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த வீட்டினுள் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பலியானவர்களில் 4 குழந்தைகளும் அடங்குகின்றனர்.

அவர்களின் அடையாளம், வயது போன்றியவை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் வகையில் குற்றவியல் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Related posts

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்

Lankathas Pathmanathan

ஒரே நாளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில்

Lankathas Pathmanathan

G7 நிதி அமைச்சர்கள் சந்திப்பின் ஆரம்பம் பயனுள்ளதாக அமைந்துள்ளது: கனடிய நிதியமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment