September 7, 2026
தேசியம்
செய்திகள்

சீனாவில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிரதமர் Trudeau ஆதரவு

சீனாவில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை கனடிய பிரதமர் Justin Trudeau வெளிப்படுத்துகின்றார்.

COVID மீதான சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு மத்தியில் சீனாவில் உள்ள அனைவரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமர் கூறுகிறார்.

தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளால் கோபமடைந்த மக்கள் பல தசாப்தங்களில் மிகப்பெரிய பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் மக்கள் சீன குடியரசின் அரசுத் தலைவரை பதவி விலக அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டங்களில் ஈடுபட்ட பலரையும் பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

தவிரவும் BBC பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் தொடரும் நிலைமைகளை கனடியர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய Trudeau, மனித உரிமைகள் குறித்த விடயங்களில் சீனா மீது கனடா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிக்கும் என தெரிவித்தார்.

Related posts

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கடுமையான பயண நடவடிக்கைகள்: மத்திய அரசு ஆலோசனை

Lankathas Pathmanathan

100 நாட்களுக்குள் நகரசபை தேர்தல்

Leave a Comment