September 4, 2026
தேசியம்
செய்திகள்

தென்கொரியா கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியரும் ஒருவர்

தென் கொரியாவில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் கனடியர் ஒருவரும் அடங்குகிறார்.

கனடிய விவகார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (30) இதனை உறுதிப்படுத்தியது.

கனேடிய அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை சேகரிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளதாக மத்திய அமைச்சு தெரிவித்துள்ளது.

தகவல்களை தனியுரிமை காரணமாக காயமடைந்த நபர் குறித்த மேலதிக விவரங்களை வெளியிட முடியாது என அமைச்சு கூறியுள்ளது.

இந்த நிலையில் தென்கொரியாவில் ஏற்பட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் Justin Trudeau இரங்கல் தெரிவித்தார்.

இந்த பேரழிவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக கொரிய கனேடியர்கள் தெரிவித்தனர்.

Related posts

தனிநாட்டை அடையும் எமது முயற்சி சிலரது சதியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது: நிமால் விநாயகமூர்த்தி

Lankathas Pathmanathan

இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

கனடாவுடன் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் வரிகள் அடங்கும்: அமெரிக்க வர்த்தக பிரதிநிதி

Lankathas Pathmanathan

Leave a Comment