September 10, 2026
தேசியம்
செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

தனது தலைமையின் கீழான இலங்கை குறித்த கொள்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கை ஒன்றை Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் Pierre Poilievre வெளியிட்டுள்ளார்.

தமிழர் சமூகத்திற்கான அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (28) Poilievre வெளியிட்டார்.

அதில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூரில் வைத்து கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும் என Poilievre கோரியுள்ளார்.

உலகின் சுதந்திரமான நாடாக கனடாவை மாற்றுவதன் மூலம், இலங்கையர்களின் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்போம் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

Related posts

சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீதான தடை ஏற்றுக்கொள்ள முடியாதது!

Lankathas Pathmanathan

கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறுகின்றனர்!

Lankathas Pathmanathan

FIFA 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment