தேசியம்
செய்திகள்

கடந்த பொதுத் தேர்தலில் 100,000 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை: கனடிய தேர்தல் திணைக்களம்

கடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 100,000 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை என கனடிய தேர்தல் திணைக்களம் புதன்கிழமை (22) தெரிவித்தது.

இவற்றில் பெரும்பாலானவை காலக்கெடுவிற்கு பின்னர் தேர்தல் திணைக்களத்தை சென்றடைந்ததாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது.

September 21ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தபால் மூலம் சிறப்பு வாக்குச் சீட்டுகளை கோரியிருந்தனர்.

2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கையில் 82 சதவீதம் அதிகரிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து உட்பட 1.1 மில்லியனுக்கும் அதிகமான சிறப்பு வாக்குச் சீட்டுகள் இம்முறை பெறப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

Related posts

கடவுச்சீட்டுக்கு போலி பயணத் திட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் கோரிக்கை

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

IIHF ஆண்கள் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற கனடிய அணி

Lankathas Pathmanathan

Leave a Comment