தேசியம்
செய்திகள்

ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கனடா தயாராக இருக்க வேண்டும்: வெளிவிவகார அமைச்சர்

ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கனடா எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு கனடிய அரசின் பதில் நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை(28) மேலவை சபையின் வெளியுறவுக் குழு முன் Joly விளக்கமளித்தார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஒரு தோல்வியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வரை கனடா தனது முயற்சிகளை நிறுத்தாது எனவும் அமைச்சர் Joly கூறினார்.

அதேவேளை உக்ரைனில் உள்ள கனடிய தூதரகம் அடுத்த சில நாட்கள் அல்லது வாரங்களில் மீண்டும் திறக்கப்படலாம் என அமைச்சர் Joly தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் இரண்டு வாரங்களில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் தொற்றால் மரணம்

Lankathas Pathmanathan

இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவை!

Gaya Raja

மேகப் புண் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment