தேசியம்
செய்திகள்

Torontoவிலும் Quebec நகரத்திலும் வார விடுமுறையில் எதிர்ப்பு போராட்டம்

சுதந்திர பேரணி என அழைக்கப்படும் எதிர்ப்பு போராட்டம் வரும் வார விடுமுறையில் Torontoவிலும் Quebec நகரத்திலும் நடைபெறவுள்ளது.
Toronto பெரும்பாகம் உட்பட மாகாணத்தின் பிற பகுதிகளில் மேலும் எதிர்ப்பு போராட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துள்ளதாக Solicitor General Sylvia Jones  வியாழக்கிழமை (03) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
இந்த போராட்டத்திற்கு எதிராக காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் கூறினார்.
காவல்துறையின் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது என கூறிய Jones, அவர்களுக்கு  ஆதரவு வழங்க மாகாண அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு முன்னதாக சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயாராக இருப்பதாக  Ontario அரசாங்கம் கூறியது.
அதேவேளை COVID சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வார இறுதியில் Quebec  சட்டமன்றத்திலும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த  போராட்டத்திற்கு முன்னதாக  Quebec   சட்டமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் வலுப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தவிதமான கலவரத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என Quebec முதல்வர்  François Legault தெளிவுபடுத்தினார்.
Ottawaவில் எதிர்வரும் வார விடுமுறையும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் Toronto, Quebec  போராட்டங்கள் குறித்த அறிவித்தல் வெளியானது.

Related posts

Scarborough: வாகன விபத்தில் தமிழ் பெண் மரணம்

Lankathas Pathmanathan

ஊடக அறமற்றது: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News செய்திக் கட்டுரையை கண்டிக்கும் கனடிய தமிழர் கூட்டு!

Lankathas Pathmanathan

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் துப்பாக்கிச் சூடு?

Lankathas Pathmanathan

Leave a Comment