November 15, 2025
தேசியம்
செய்திகள்

பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் ஐந்து மாகாணங்கள்

ஐந்து மாகாணங்களை இந்த வாரம் தாக்கவுள்ள குளிர்காலப் புயல் பல நாட்களுக்கு கடுமையான பனிப் பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகின்றது.

சில பகுதிகளில் 30 cm வரை பனி பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Ontario, Quebec, Maritimes ஆகியன இந்த வாரம் கடுமையான பனிப் பொழிவை எதிர்கொள்கின்றன.

தெற்கு Ontario, தெற்கு Quebec, மூன்று Maritimes மாகாணங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா குளிர்கால புயல் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு Ontarioவின் எல்லை நகரங்களான Sarnia, Windsor, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கனடாவில் அதிக பனிப்பொழிவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன் (02) காலை முதல் வியாழன் இரவு வரை இந்த பகுதிகள் 20 முதல் 30 cm பனிப்பொழிவு, மணிக்கு 50 முதல் 60 KM வேகத்தில் காற்று ஆகியவற்றை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.

Related posts

இளம் கனேடியர்களிடையே அதிகரிக்கிறது COVID19 தொற்றுக்களின் பாதிப்பு!

Gaya Raja

வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை உணர்ந்தேன்: திருத்தந்தை

Quebec பொது சுகாதார இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment