தேசியம்
செய்திகள்

இந்தியாவுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகளை கனடிய அரசாங்கம் நீக்கியது

இந்தியா, மொராக்கோ ஆகிய நாடுகளுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகள் கனடிய அரசாங்கம் நீக்கியுள்ளது.

மத்திய அரசின் இணையதளத்தில் இந்த இரண்டு நாடுகளுக்கான புதிய பயண ஆலோசனை வெளியாகியுள்ளது.

அதில் இந்தியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் இருந்து கனடாவிற்கு வரும் விமானங்களுக்கான சிறப்பு COVID தொடர்பான நுழைவுத் தேவைகளும் தகவல்களும் வியாழக்கிழமை (27) முதல் அகற்றப்பட்டுள்ளன.

அதிகரித்த தொற்று காரணமாக கடந்த Aprilலில் இந்தியாவிலிருந்து, Augustடில் மொரோக்கோவிலிருந்து நேரடி விமானங்களை கனடிய அரசாங்கம் நிறுத்தியது

September மாதத்தில் இந்தியாவிற்கும், மொராக்கோவிற்கு Octoberரிலும் இந்த தடை நீக்கப்பட்டது.

Related posts

Ontarioவில் ஜந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி முன்பதிவுகள் வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

 Torontoவில் புதிய வெறுப்பு குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment