தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை போராட்டம்

கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள எதிர்ப்பாளர்கள் பலர் Ottawaவை சென்றடைந்துள்ளனர்.
Ottawa நோக்கி அணிவகுக்கும் சரக்கு வாகன ஓட்டுனர்களின் பாரிய போராட்டம் கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை காலை ஆரம்பிக்க ஏற்பாடாகியுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பாளர்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள்  தெரிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த, உள்ளூர் காவல்துறை ஏனைய நகரங்களிலிருந்து உதவியை அழைத்துள்ளது என Ottawa காவல்துறைத் தலைவர் Peter Sloly வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
நாடு முழுவதும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்விற்கு தயாராவதற்கு RCMP உட்பட மாகாண, தேசிய முகவர்களுடன் உள்ளூர் காவல்துறை இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறினார்.

Related posts

Montréal கத்திக் குத்தில் மூவர் பலி – சந்தேக நபர் கைது!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 1ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

வார விடுமுறையின் புயல் காற்றின் காரணமாக பத்து பேர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment