September 9, 2026
தேசியம்
செய்திகள்

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

வத்திக்கானுக்கான தமது பயணத்தை ஒத்தி வைப்பதாக கனடாவின் முதற்குடியினர் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தனர்.
COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Chief RoseAnne Archibald அறிவித்தார்.

December 17 முதல் 20 வரை பாப்பரசர் போப் பிரான்சிசுடன்  முதற்குடியினர் பிரதிநிதிகள் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்த பயணத்தை ஒத்திவைப்பதற்கான முடிவு கடினமானது என கத்தோலிக்க ஆயர்களின் கனடிய சபையும் தேசிய முதற்குடியின அமைப்பும் வெளியிட்ட கூட்டறிக்கை கூறுகிறது.

இந்த பயணத்தை ஏற்பாடு செய்யும் கத்தோலிக்க ஆயர்களின் கனடிய சபையின் தலைவரும் துணைத் தலைவரும் 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த சந்திப்பை மீண்டும் திட்டமிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழ் பெண் அடையாளம் காணப்பட்டார்!

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 20ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணிக்கு உதவ உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் CTC வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment