தேசியம்
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும்: Theresa Tam

COVID தொற்றின் புதிய திரிபின் உலகளாவிய பரவல் மத்தியில், பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிப்பதாக கூறப்படுகின்றது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam புதன்கிழமை  இந்த தகவலை  தெரிவித்தார். புதிய திரிபின் பரவல் அதிகரித்துள்ள இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தல், குறிப்பிட்ட பலனை மாத்திரம் கனடாவிற்கு  வழங்கும் என அவர் கூறினார்.

இந்த நிலையில் கனடாவின் ஒரு மூலோபாயம் – ஒவ்வொரு நாட்டிற்கும் அதிகமான பாதுகாப்புகளை இணைப்பதாகும் என வைத்தியர் Tam  கூறினார். இதுவரை கனடா 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  புதிய தொற்றின் திரிபுகளை பதிவு செய்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts

கனடா எல்லைக்கான PCR சோதனை நடைமுறை தொடர்ந்தும் இருக்கும்:  துணைப் பிரதமர் Chrystia Freeland 

Gaya Raja

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து – விமானி மரணம்!

Lankathas Pathmanathan

ஒரு புதிய தொழில்துறை சகாப்தத்திற்கான தொலைநோக்குப் பார்வை?

Lankathas Pathmanathan

Leave a Comment