Hormuz நீரிணை வர்த்தக வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தையில் கனடா பங்கேற்கவுள்ளது.
Hormuz நீரிணை வர்த்தக வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (02) நடைபெறவுள்ளது.
இந்த வர்த்தக வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான இராஜதந்திர வழிகளைக் கண்டறிவது குறித்து இங்கிலாந்து தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பல நாடுகள் பங்கேற்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் கனடாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில் ஒரு யுத்த நிறுத்தம் ஏற்பட்டவுடன், இந்த நீரிணையை பாதுகாக்க உதவுவதற்கு கனடா தயங்காது என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் அறிந்து கொள்ள வேண்டும் என அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பதிலடியாக பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான Hormuz நீரிணை யை ஈரான் மூடியுள்ளது.
இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான Hormuz நீரிணை பகுதியில் 500 கப்பல்கள் வரை சிக்கியுள்ளன.
இதனால் கடந்த ஒரு மாதத்தில் உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் குறிப்பிட்ட நீரிணை வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்து அந்த வழித்தடம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஒருங்கிணைந்து செயல்பட 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
