தேசியம்
செய்திகள்

குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தம்!

கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் எட்டிய ஒப்பந்தம், தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் என கல்வி அமைச்சர் Stephen Lecce தெரிவித்தார்.

கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியதால் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது.

கல்வி ஊழியர்களும் அரசாங்கமும் ஞாயிற்றுக்கிழமை (20) ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியதால், Ontarioவில் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது.

CUPE எனப்படும் கனடிய பொது ஊழியர் சங்கத்திற்கும், Ontario மாகாணத்திற்கு இடையே வார இறுதியில் தொடர்ந்த தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

மொத்தம் 171 நாட்களாக இரு தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த ஒப்பந்தம் CUPE உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை (24) ஆரம்பமாகி வார இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கனடிய பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்?

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

ஆறு இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிறு மாலை ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment