September 2, 2026
தேசியம்
செய்திகள்

அதிக குடும்பக் கடன் காரணமான பொருளாதார ஆபத்து: கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை

அதிக குடும்பக் கடன் காரணமான ஏற்படக்கூடிய பொருளாதார ஆபத்து குறித்து கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை மத்திய வங்கி விடுத்துள்ளது.

வீட்டுக் கடன்களின் உயர்வு, அதிகரித்துவரும் வீடுகளின் விலைகள் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு முக்கிய பாதிப்புகளாக உள்ளன என மத்திய வங்கி அதன் வருடாந்த நிதி மதிப்பாய்வில் கூறியுள்ளது.

கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதங்களை முந்தைய இலக்கான 3 சதவீதத்திற்கு மேல் உயர்த்தத் தயாராக இருப்பதாக கடந்த வாரம் கூறியிருந்தது.

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்குள் அடமானக் கொடுப்பனவுகள் 45 சதவீதம் வரை அதிகரிக்கலாம் எனவும் மத்திய வங்கி வியாழக்கிழமை (09) எச்சரித்துள்ளது.

Related posts

பயமுறுத்தும் நகர்வை மேற்கொள்ளும் Conservative கட்சி: அமைச்சர் Mendicino குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Ontario பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளுக்கு முழுமையான தடை சாத்தியம்?

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment