தேசியம்
செய்திகள்

பிரதமர் Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்!

பிரதமர் Justin Trudeau இன்றைய Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்.

Ottawaவில் நடைபெற்ற தேசிய நினைவு தின நிகழ்வு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி அடையாளம் காணப்பட்டதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக RCMP கூறுகிறது.

நினைவு தின நிகழ்விற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, RCMP அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் அடைப்படையில் குறிப்பிட்ட பொதி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

இதன் காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பிரதமர் Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon ஆகியோர் தாமதமாகவே சென்றடைந்தனர்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

தடுப்பூசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை

Gaya Raja

புதிய பிரதமராக Mark Carney வெள்ளி பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment