தேசியம்
செய்திகள்

பிரதமர் Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்!

பிரதமர் Justin Trudeau இன்றைய Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்.

Ottawaவில் நடைபெற்ற தேசிய நினைவு தின நிகழ்வு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி அடையாளம் காணப்பட்டதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக RCMP கூறுகிறது.

நினைவு தின நிகழ்விற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, RCMP அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் அடைப்படையில் குறிப்பிட்ட பொதி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

இதன் காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பிரதமர் Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon ஆகியோர் தாமதமாகவே சென்றடைந்தனர்.

Related posts

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம்: பிரதமர் Trudeau

Gaya Raja

வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை

Lankathas Pathmanathan

Leave a Comment