September 3, 2026
தேசியம்
செய்திகள்

ஊடக அறமற்றது: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News செய்திக் கட்டுரையை கண்டிக்கும் கனடிய தமிழர் கூட்டு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News ஊடகத்தின் செய்திக் கட்டுரையை கனடிய தமிழர் கூட்டு வன்மையாக கண்டித்துள்ளது.

Global News ஊடகம் வெள்ளிக்கிழமை (06)   வெளியிட்ட கட்டுரையில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயலாற்றும் தகுதியை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

இந்தக் கட்டுரை ஊடக அறமற்றது என கனடிய தமிழர் கூட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கண்டித்துள்ளது.

அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி ஒரு தமிழர் என்பதால், அவர் ஒரு இன ரீதியான தாக்குதலை எதிர்கொள்வதாக வெள்ளிஇரவு வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது.

அமைச்சர் எந்த ஒரு தவறையும் இழைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள கனடிய தமிழர் கூட்டின் அறிக்கை, இதில் எந்த ஒரு ஒழுங்குமுறை மீறலும் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

Global News ஊடகம் இந்த விடயத்தில் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என கனடிய தமிழர் கூட்டின் அறிக்கை வலியுறுத்துகிறது.

கனடிய தமிழர் கூட்டின் அறிக்கை:
Statement by Canadian Tamil Collective:

Related posts

Mississauga நகர முதல்வர் இடைத்தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

கனேடிய வெளியுறவு அமைச்சர் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment