தேசியம்
செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக St. John சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்த வெடிகுண்டு மிரட்டலின் நம்பகத்தன்மையை காவல்துறையினர் விசாரித்தனர்.

இதனால் St. John சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (12) காலை அனைத்து விமான நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனாலும் இந்த மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது” என தமது விசாரணையின் பின்னர் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் விமான நிலையம் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

Related posts

Huawei, ZTE ஆகியவற்றை 5G வலைப் பின்னல்களில் இருந்து தடை செய்யும் கனடா

கனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய புதிய அதிகாரங்களை வழங்கும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் தமிழருக்கு இணை அமைச்சர் பதவி

Lankathas Pathmanathan

Leave a Comment