தேசியம்
செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக St. John சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்த வெடிகுண்டு மிரட்டலின் நம்பகத்தன்மையை காவல்துறையினர் விசாரித்தனர்.

இதனால் St. John சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (12) காலை அனைத்து விமான நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனாலும் இந்த மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது” என தமது விசாரணையின் பின்னர் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் விமான நிலையம் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

Related posts

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

New Brunswick அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan

N.W.T. விமான விபத்தில் ஆறு பேர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment