அஞ்சல் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திடமிருந்து வேலை நிறுத்த அறிவிப்பை பெற்றுள்ளதாக கனடா Post தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சுமார் 55,000 அஞ்சல் ஊழியர்கள் வார இறுதிக்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை (23) நள்ளிரவு முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்கள் திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளதாக கனடா Post தெரிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தம் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள், வணிகங்களை பாதிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.
கனடா ஆண்டொன்றுக்கு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான கடிதங்களையும், சுமார் 300 மில்லியன் பொதிகளையும் விநியோகிக்கிறது.
