Ontario மாகாணத்தில் மின்சாரம் இல்லாத வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
80,000-க்கும் மேற்பட்ட Hydro One வாடிக்கையாளர்கள், ஞாயிற்றுக்கிழமை (06) மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொண்டனர்.
கடந்த வாரம் வீசிய பனிப்புயலுக்கு பின்னர் மின்சாரத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் மின் இணைப்புகளை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக Hydro One தெரிவித்தது.
வானிலை தமக்கு சாதகமாக இருப்பதாகவும், பனிப் புயலால் ஏற்பட்ட சேதத்தை அளவிட உதவுவதற்காக உலங்கு வானுர்த்திகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக Hydro One தெரிவித்தது.
கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிப்புயல், அதைத் தொடர்ந்து பெய்த பலத்த காற்று, மழைக்குப் பின்னர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகள், வணிகங்கள் மின்சார செயலிழப்பை எதிர்கொண்டன.
Hydro One வெளியிட்டுள்ள பிராந்திய தரவுகளின் அடிப்படையில் Kawartha Lakes அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் 20,000 பேர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என தெரிவிக்கிறது.
