தேசியம்
செய்திகள்

இலையுதிர் காலத்தில் தேர்தலை கட்டாயப்படுத்த NDPக்கு அழைப்பு!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க புதிய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singhக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த அழைப்பை விடுத்தார்.

Liberal அரசாங்கத்துடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுமாறு NDPயை Pierre Poilievre கோரினார்.

Liberal சிறுபான்மை அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருக்க உதவும் நம்பிக்கை ஒப்பந்தத்தில் NDP உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதன் மூலம் இலையுதிர் காலத்தில் தேர்தலை கட்டாயப்படுத்த அவர் வலியுறுத்தினார்.

அடுத்த தேர்தலுக்கான நிர்ணயிக்கப்பட்ட திகதியாக October 2025 அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை May இறுதிக்குள் தீர்மானிக்கப்படும்

Lankathas Pathmanathan

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 500,000 குழந்தைகள் மருந்து

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment