தேசியம்
செய்திகள்

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி விலகல்

கனடிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் Birju Dattani பதவி விலகினார்.

அண்மையில் நியமிக்கப்பட்ட கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையாளர் பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் குறித்து அவரது கருத்துக்கள் மீதான விசாரணையின் பின்னர் Birju Dattani பதவி விலகினார்.

இஸ்ரேல் தொடர்பில் கடந்த காலங்களில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான விசாரணையின் பின்னர் பதவி விலக ஒப்புக்கொண்டதாக Birju Dattani தெரிவித்துள்ளார்.

இவரது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து கனடிய யூத அமைப்புகள் கவலை தெரிவித்ததையடுத்து நீதி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்த நிலையில் தனது கடமையை ஆரம்பிக்க முன்னரே பதவி விலக அவர் முடிவு செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை அவர் தெரிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை Birju Dattani முன்னர் மறுத்திருந்தார்.

Related posts

நாடு முழுவதும் வெப்ப எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது!

Lankathas Pathmanathan

January மாதம் சில்லறை விற்பனையில் வீழ்ச்சி

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்கம் January மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment