தேசியம்
செய்திகள்

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

உக்ரைனில் உள்ள தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 36 வயதான Jean-Francois Ratelle என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனில் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் அவரது பெயரையோ, மரணத்திற்கான காரணத்தையோ அவர்கள் வெளியிடவில்லை.

மேலும் தகவல்களை பெறுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாகவும்,  குடும்பத்திற்கு தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

British Columbiaவிற்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் உணர்த்தி நிற்கிறது: அனைத்துலகத் தமிழர் பேரவை தலைவர்

Lankathas Pathmanathan

கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது

Leave a Comment