தேசியம்
செய்திகள்

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

உக்ரைனில் உள்ள தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 36 வயதான Jean-Francois Ratelle என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனில் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் அவரது பெயரையோ, மரணத்திற்கான காரணத்தையோ அவர்கள் வெளியிடவில்லை.

மேலும் தகவல்களை பெறுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாகவும்,  குடும்பத்திற்கு தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

Scarboroughவில் புதன்கிழமை தமிழர்களுக்கான சிறப்பு COVID தடுப்பூசி வழங்கும் திட்டம்

Gaya Raja

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் மேலும் கல்லறைகள் கண்டு பிடிக்கப்படும்: சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller

Lankathas Pathmanathan

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

Leave a Comment