தேசியம்
செய்திகள்

Richmond Hill இல்லத்தில் ஐந்து மாத குழந்தை உட்பட மூன்று பேர் சடலமாக மீட்பு

Richmond Hill நகரில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டனர்.

இவர்களில் ஐந்து மாத குழந்தையும் அடங்குவதாக York பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

கடந்த வாரம் வியாழக்கிழமை (February 1) நிகழ்ந்த இந்த சம்பவம் ஒரு குடும்ப வன்முறை என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

உயிரிழந்த இணைய இருவர் 41 வயதுடைய ஆண், 36 வயதுடைய பெண் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்கள் ஒருவர் மற்றவர்களுடன் கொண்ட உறவு நிலை , காவல்துறையால் வெளியிடப்படவில்லை.

பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் மரணத்திற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

Related posts

ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கு Trudeau பயணம்

Lankathas Pathmanathan

வாகன திருட்டு குற்றச்சாட்டில் தமிழர் உட்பட 8 பேர் கைது!

Lankathas Pathmanathan

மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்களை எதிர்கொள்ளும் கனடிய அரசாங்கம்!

Gaya Raja

Leave a Comment