தேசியம்
செய்திகள்

$15 பில்லியன் செலவைக் குறைக்குமாறு அமைச்சரவைக்கு கடிதம்

15 பில்லியன் டொலர் செலவைக் குறைக்குமாறு Justin Trudeau அமைச்சரவையிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அடங்கிய ஒரு கடிதம் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருவூல வாரிய தலைவர் அனிதா ஆனந்த் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சுகளின் வரவு செலவுத் திட்டங்களில் குறைக்க வேண்டிய பகுதிகளைக் கண்டறிய October 2ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

2028ஆம் ஆண்டுக்குள் செலவினத்தை 14.1 பில்லியன் டொலர்களாக குறைக்கவும், அதை தொடர்ந்த ஆண்டுகளில் செலவினத்தை 4.1 பில்லியன் டொலர்களாக குறைக்கவும் கோரப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலை இழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என அனிதா ஆனந்த் கூறினார்.

அடுத்த வாரம் Prince Edward தீவில் சந்திக்கும் Liberal அமைச்சரவை, இந்த விடயம் உட்பட்ட பல விடயங்களை விவாதிக்கும் என கருவூல வாரிய தலைவர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freelandடின் 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒட்டுமொத்த 15.4 பில்லியன் டொலர் சேமிப்பு உறுதிமொழி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

Lankathas Pathmanathan

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சட்ட சவாலை விரைவுபடுத்தும் நீதிமன்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment