தேசியம்
செய்திகள்

குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தாய் மீது பதிவு

Edmontonனில் குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தாய் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள FBI வழங்கிய தகவலில் அடிப்படையில் இந்த குழந்தை கடந்த சனிக்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளது.

கடந்த October மாதம் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டில் Californiaவில் 30 வயதான ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னணியில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

Edmontonனில் கைது செய்யப்பட்டவர் 35 வயதான பெண் என தெரியவருகிறது.

மீட்கப்பட்ட குழந்தை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கைதான பெண் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, February 22 ஆம் திகதி மாகாண நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட உள்ளார்.

Related posts

ISIS முகாமில் இருந்து கனடிய குடும்பம் நாடு திரும்புகிறது

Lankathas Pathmanathan

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி எண்ணிக்கை குறைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment