தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்

பொது ஒழுங்கு அவசர ஆணைய அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர், உயர்மட்ட பிரதமர் அலுவலக ஊழியர்கள், அமைச்சர்கள் அடுத்த வாரம் சாட்சியமளிக்க உள்ளனர்.

அவசரகாலச் சட்ட விசாரணையின் இறுதி வாரத்தில் பிரதமர் Justin Trudeau சாட்சியமளிக்க உள்ளார்.

பிரதமரின் உயர்மட்ட ஊழியர்கள், அமைச்சரவையின் பல உறுப்பினர்கள் அடுத்த வாரம் சாட்சியமளிக்க உள்ளார்.

பிரதமரின் உயர்மட்ட ஊழியர்கள் மூவர் சாட்சியாளர் பட்டியலில் இணைக்கப்பட்டதை வெள்ளிக்கிழமை (18) ஆணையம் உறுதிப்படுத்தியது

அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair, பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlanc, நீதி அமைச்சர் David Lametti, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland ஆகியோர் அடுத்த வாரம் சாட்சியமளிக்க உள்ளனர்.

கடந்த ஐந்து வாரங்களில், அவசரகாலச் சட்டத்தின் மத்திய அரசின் கோரிக்கையை ஆராயும் ஆணையம் 62 சாட்சிகளிடம் இருந்து சாட்சியங்களை செவிமடுத்து உள்ளது

Related posts

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களும்  விடுதலை! 

Gaya Raja

தடுப்பூசி பெறாத பயணிகள் கனடாவுக்கு வரவேற்கப்பட மாட்டார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja

முதற்குடி நல்லிணக்க திட்டங்களுக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி – கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் குழு

Gaya Raja

Leave a Comment