தேசியம்
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தை முன்னகர்த்தும் Ontario

Ontario தனது மீண்டும் திறக்கும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வியாழக்கிழமை நகர்கின்றது.
திங்கட்கிழமை (14) முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
தடுப்பூசி கடவுச்சீட்டு தேவைகளுக்கான சான்று அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களிலும் March மாத ஆரம்பத்தில் முடிவுக்கு வரவுள்ளது எனவும் Ford இன்று அறிவித்தார்.
மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக Ford கூறினார்.
12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் booster தடுப்பூசிகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் பெறமுடியும் எனவும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் Ford  அறிவித்தார்.

Ontarioவில் 12  வயதிற்கு  மேற்பட்டவர்களில் சுமார் 92 சதவீதம் பேர்  குறைந்தது இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Ontario மாகாண நெடுஞ்சாலைகள் சிலவற்றின் வேகக் கட்டுப்பாடு விரைவில் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

பசுமை கட்சியின் இணைத் தலைவர்களில் ஒருவர் தேர்தலில் வெற்றி!

Lankathas Pathmanathan

தமிழ்ச் சமூக மையத்திற்கு $460,000 நிதி உத்தரவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment