தேசியம்
செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூடப்பட்ட Waterloo விமான நிலையம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Waterloo விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது.

Waterloo பிராந்திய காவல்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை (13) பிற்பகல் Waterloo சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Waterloo சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 2:10 மணியளவில் ஒரு விமானத்தில் வெடிகுண்டு இருந்ததான புகார் காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டது.

விமானத்தில் வெடிகுண்டுகள் ஏதேனும் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய வெடிபொருட்களை அகற்றும் பிரிவைச் சேர்ந்தவர்கள் சோதனைகளை முன்னெடுகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதால் விமான நிலையம் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

Related posts

Venezuela மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கனடாவில்

Lankathas Pathmanathan

6 பேர் உயிரிழந்த Alberta விமான விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Sault Ste. Marie நகரில் மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan

Leave a Comment