தேசியம்
செய்திகள்

மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் SNC நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்களும்!

SNC-Lavalin நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்கள் இருவரும் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர்.

மேம்பாலக் கட்டுமான ஒப்பந்தம் ஒன்றில் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், SNC-Lavalin கட்டுமான நிறுவனத்தின் இரண்டு முன்னாள் உத்தியோகத்தர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

RCMPயினால் மோசடி மற்றும் போலி குற்றங்களுக்காக குற்றச் சாட்டுகள் இவர்கள் மீது பதிவாகியுள்ளது.

SNC-Lavalinலின் முன்னாள் துணைத் தலைவர் Normand Morin, SNC-Lavalinலின் சர்வதேச பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் Kamal Francis ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களும், SNC-Lavalin நிறுவனமும் அரசாங்கத்திற்கு எதிரான மோசடி உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என RCMP உறுதிப்படுத்தியுள்ளது.

RCMPயின் நீண்ட மற்றும் விரிவான குற்றவியல் விசாரணையை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.

Related posts

சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றம் நோக்கிய வாகனப் பேரணி

Lankathas Pathmanathan

20 மாதங்களின் பின்னர் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதி!

Lankathas Pathmanathan

Leave a Comment