தேசியம்
செய்திகள்

மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் SNC நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்களும்!

SNC-Lavalin நிறுவனமும் அதன் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர்கள் இருவரும் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர்.

மேம்பாலக் கட்டுமான ஒப்பந்தம் ஒன்றில் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், SNC-Lavalin கட்டுமான நிறுவனத்தின் இரண்டு முன்னாள் உத்தியோகத்தர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

RCMPயினால் மோசடி மற்றும் போலி குற்றங்களுக்காக குற்றச் சாட்டுகள் இவர்கள் மீது பதிவாகியுள்ளது.

SNC-Lavalinலின் முன்னாள் துணைத் தலைவர் Normand Morin, SNC-Lavalinலின் சர்வதேச பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் Kamal Francis ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களும், SNC-Lavalin நிறுவனமும் அரசாங்கத்திற்கு எதிரான மோசடி உட்பட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என RCMP உறுதிப்படுத்தியுள்ளது.

RCMPயின் நீண்ட மற்றும் விரிவான குற்றவியல் விசாரணையை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.

Related posts

நெடுஞ்சாலை 401 விபத்தில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்கள் குறித்த அறிவித்தலை வெளியிடும் குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

தொற்றுக் காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டு!

Gaya Raja

Leave a Comment