அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ பயண எச்சரிக்கையை கனடா மீண்டும் புதுப்பித்துள்ளது.
கனடிய பயணிகள் கனடிய அமெரிக்க எல்லையில் எவ்வாறு நடத்தப்படலாம் என்பது குறித்த சில கடுமையான எச்சரிக்கைகள் அண்மைய பயண எச்சரிக்கையில் அடங்கியுள்ளன.
கனடியர்கள் அமெரிக்காவிற்குள் நுழையும் போது அதிகரித்த கண்காணிப்பை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.
இதில் தொலைபேசிகள், மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களின் சாத்தியமான தேடல்களும் அடங்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகள் சட்டப்பூர்வ குடியுரிமை அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் கோரலாம் எனவும் கனடிய மத்திய அரசு தனது குடிமக்களுக்கு எச்சரிக்கிறது.
அமெரிக்காவுக்குள் அனுமதி மறுக்கப்படும் கனடியர்கள் நாடு கடத்தப்படுவதற்கு காத்திருக்கும் போது தடுத்து வைக்கப்படலாம் என் கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குள் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்க விரும்பும் கனடியர்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை வெள்ளிக்கிழமை (11) நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அவ்வாறு பதிவு செய்யாத கனடியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
கடந்த March மாதம் ஜனாதிபதி Donald Trump கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின் கீழ் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இது இரு நாட்டின் அரசாங்கங்களுக்கு இடையே புதிய பதற்றத்தைத் தூண்டியது.
