தேசியம்
செய்திகள்

150 கனேடியர்கள் இதுவரை சூடானில் இருந்து வெளியேற்றம்

சூடானில் இருந்து வெளியேற உதவி கோரும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது

வெளியுறவு அமைச்சர் Mélanie Joly புதன்கிழமை (26) இந்த தகவலை வெளியிட்டார்

புதனன்று மேலும் 50 கனடியர்கள் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதன் மூலம் கடந்த சில நாட்களில் சுமார் 150 கனேடியர்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் சூடானில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் மேலும் பலர் அங்கிருந்து வெளியேற கனடிய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளனர்.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரிடையே 1,800 கனடியர்கள் சிக்கியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 700 பேர் அங்கிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மேலும் மூன்று Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல்!

Gaya Raja

Trudeau அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி, இயக்குநர் குழு உறுப்பினர்கள் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment