தேசியம்
செய்திகள்

British Colombiaவில் அவசர நிலை பிரகடனம்: முதல்வர் தகவல்!

British Colombia மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பேரழிவுகரமான வெள்ளத்தின் எதிரொலியாக இந்த அவசர நிலையை முதல்வர் John Horgan புதன்கிழமை அறிவித்தார்.

இந்த அவசரகால நிலை புதன்கிழமை நண்பகல் முதல் அமலுக்கு வந்துள்ளதாக Horgan கூறினார்.

மற்றொரு இயற்கை பேரழிவு காரணமாக  British Columbia வாசிகள் கடந்த சில நாட்களாக நம்பமுடியாத அளவில் சவால்களை எதிர்கொண்டதாக கூறிய முதல்வர் Horgan, கனமழை, காற்று, வெள்ளம் என்பன மாகாணத்தின் முழு சமூகங்களையும் அழித்துவிட்டதாக கவலை தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்த அவர் குறைந்தது ஒருவர்  மரணமடைந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

துரதிர்ஷ்டவசமாக, வரவிருக்கும் நாட்களில் மேலும் இறப்புகளை உறுதிப்படுத்தும் நிலை தோன்றும் எனவும் Horgan கூறினார்.

British Columbia மாகாணத்திற்கான  மீட்பு உதவிகள் குறித்து பிரதமர் Justin Trudeauவிடம் பேசியதாகவும் அவர்  தெரிவித்தார்.

பிரதமரிடன் மாகாணத்தின் சார்பில் கனேடிய ஆயுதப் படைகளின் உதவியைக் கோரியுள்ளதாகவும் முதல்வர் Horgan உறுதிப்படுத்தினார்.

Alberta, Saskatchewan, Ontario அரசாங்கங்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளன எனவும் Horgan தெரிவித்தார்.
300 கனேடிய ஆயுதப் படைகள் உடனடியாக British Colombiaவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவசர தயார்நிலை அமைச்சர் Bill Blair உறுதிப்படுத்தினார்.
வெளியேற்ற உத்தரவு காரணமாக சுமார் 17,775 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறயுள்ளதாக British Colombia மாகாணத்தின் போக்குவரத்து மற்றும் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது
184 பேர் Abbotsfordடில் உள்ள வெள்ளப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் இந்த வெள்ளம் காரணமாக இறந்துள்ளதாக மாகாண விவசாய அமைச்சர் கூறினார் .

Related posts

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

Lankathas Pathmanathan

COVID தொற்றின் புதிய திரிபு Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும்

Lankathas Pathmanathan

தனது தலைமையை கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைக்கும் Erin O’Toole

Lankathas Pathmanathan

Leave a Comment