தேசியம்
செய்திகள்

Toronto சமூக குடியிருப்பு கத்திக் குத்தில் ஒருவர் மரணம் – மூவர் கைது

Scarboroughவில் உள்ள Toronto சமூக குடியிருப்பு – Toronto Community Housing –  கட்டிடத்தில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்தார்.

வியாழக்கிழமை (07) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவ இடத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரை Toronto காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்தில் மரணமானார்.

இதில் வேறு எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என Toronto அவசர உதவி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் ஒரு ஆண், இரண்டு பெண் என தெரியவருகிறது.

இதில் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

Via புகையிரத வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan

நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்த கனடியர்கள்!

Gaya Raja

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை – CTC அறிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment