தேசியம்
செய்திகள்

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  ஆலோசனை

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  போலந்து அதிபருடன் கனடிய பிரதமர் உரையாடினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் நான்காவது நாளான வியாழக்கிழமை (10) Justin Trudeau போலந்து ஜனாதிபதி Andrzej Dudaவை சந்தித்தார்.
அகதிகள் விடயத்தில் கனடாவின் உதவிகளுக்கு இந்த சந்திப்பில் போலந்து ஜனாதிபதி  நன்றி தெரிவித்தார்.
கனடாவுக்குச் செல்ல விரும்பும் அகதிகளை விரைவாக அழைத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
உக்ரைனில் தொடரும் போர் காரணமாக போலந்து எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியை Trudeau வியாழனன்று நேரடியாக பார்வையிட்டார்.

Related posts

மருத்துவமனை பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் உதவ வேண்டும்: முதல்வர் Ford

மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது கனடா புதிய தடை

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவையின் நகர்வுகள் கபடத்தனமானவை: கனேடியத் தமிழர் கூட்டு கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment